ஜேசிஐ சங்க விழா: சமூக சேவையாற்றியோருக்கு விருது
ஜேசிஐ பவர் மன்னார்குடி அமைப்பின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜேசிஐ சங்க ஆண்டு விழா மண்டல மாநாட்டில், சமூக சேவையாற்றிய இயக்கங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
ஜேசிஐ பவர் மன்னார்குடி அமைப்பின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜேசிஐ சங்க ஆண்டு விழா மண்டல மாநாட்டில், சமூக சேவையாற்றிய இயக்கங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
மன்னார்குடி ருக்மணிபாளையம் நடுத்தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவுக்கு, சங்கத்தின் மண்டல துணைத் தலைவர் கவிதா செந்தில் தலைமை வகித்தார். மண்டலத் தலைவர் கே. வெங்கடேஷ் மாநாட்டை தொடங்கி வைத்தார்.
சிறப்பு அழைப்பாளர்களை ஜேசிஐ பவர் மன்னார்குடி கிளைத் தலைவர் கே.கண்ணன் அறிமுகம் செய்து வைத்தார். ஜேசிஐ இயக்கத்தின் நோக்கமும் மற்றும் சமுதாய வளர்ச்சியில் அதன் பங்கும் என்ற தலைப்பில், அமைப்பின் முன்னாள் தேசியத் தலைவர் நா. முத்துசாமி, சமுதாய மேம்பாடு என்ற தலைப்பில் பூ உலகின் நண்பர்கள் அமைப்பின் தலைவர் வீ. சுந்தர்ராஜன், சமூக ஆர்வலர் ஆலங்குடி ஆர். வெள்ளைச்சாமி ஆகியோர் பேசினர்.
தொடர்ந்து, மண்டலத்துக்குள்பட்ட பகுதியில் சிறந்த சமூக சேவையாற்றிய கிளை இயக்கங்களுக்கு விருது வழங்கப்பட்டது. மேலும், பாரம்பரிய கலாசார நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
விழாவில், ஜேசிஐ முன்னாள் தேசியத் தலைவர் ஜி. சிவக்குமார், முன்னாள் தேசிய சட்ட ஆலோசகர் ஜி. வெங்கடேசன், முன்னாள் தேசிய ஒருங்கிணைப்பாளர் சா. சம்பத், மண்டலச் செயலர் சா. அகிலன், மண்டல இயக்குநர் வீ. காந்தி லெனின், மாநாட்டு இயக்குநர் பி.சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.