பேருந்து நிலையத்தில் மாரடைப்பால் பெண் சாவு
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பெண், மாரடைப்பு ஏற்பட்டு திங்கள்கிழமை உயிரிழந்தார்.
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பெண், மாரடைப்பு ஏற்பட்டு திங்கள்கிழமை உயிரிழந்தார்.
கும்பகோணத்தை அடுத்த அரசாலற்றைச் சேர்ந்தவர் பாலாம்பிகா (65). இவர் மன்னார்குடி பகுதியில் உள்ள கோயில்களில் சாமி கும்பிட்டுவிட்டு, கும்பகோணம் செல்வதற்காக நடேசன் தெருவில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, மயங்கி விழுந்தார். தகவலறிந்து வந்த போலீஸார், அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில், அவர் இறந்துபோனது தெரியவந்தது. இது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.