நாகப்பட்டினம்

விருது பெற்ற மருத்துவத் துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

DIN

மாநில அளவில் சிறப்பான செயல்பாட்டுக்காக தமிழக சுகாதாரத் துறையின் விருது பெற்ற நாகை மாவட்ட காசநோய் தடுப்புப் பிரிவு மற்றும் குடும்பநலத் துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் பாராட்டு தெரிவித்தார்.
மாநில அளவில், 2017 -ஆம் ஆண்டில் காசநோய் கட்டுப்பாடு மற்றும் சிகிச்சையில் சிறப்பாக செயல்பட்டதற்காக நாகை மாவட்ட காசநோய் தடுப்புப் பிரிவு இரண்டாம் பரிசை வென்றது. இதேபோல,  அதிகளவில் குடும்ப நல அறுவைச் சிகிச்சைகளை மேற்கொண்டதில் நாகை மாவட்ட குடும்ப நலத் துறை மூன்றாம் பரிசை வென்றது.  இதற்கான பரிசுகள் மற்றும் விருதுகளை சென்னையில் அண்மையில் நடைபெற்ற விழாவில், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் வழங்கினார்.
விருது பெற்ற காசநோய் தடுப்புப் பிரிவு மற்றும் குடும்ப நலத் துறை மருத்துவ அலுவலர்களை புதன்கிழமை மாவட்ட ஆட்சியரகம் அழைத்து, மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் பாராட்டினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல்!

பூவே.. செம்பூவே..!

வாக்களித்த பிரபலங்கள்!

ஜெயக்குமார் உடல் கூறாய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

SCROLL FOR NEXT