எருக்கூர் பெருமாள் கோயிலில் அகண்டநாம சங்கீர்த்தனம்
சீர்காழி அருகேயுள்ள எருக்கூர் அருள்மிகு லெட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் அகண்டநாம சங்கீர்த்தன வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சீர்காழி அருகேயுள்ள எருக்கூர் அருள்மிகு லெட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் அகண்டநாம சங்கீர்த்தன வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விவசாயம் செழிக்கவும், மக்கள் நலமாக வாழவும், குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கவும் வேண்டி நடைபெற்ற இந்த வழிபாட்டில் வெங்கட்ராம அய்யர் தலைமையிலான குழுவினர் அகண்ட நாம சங்கீர்த்தன ஜபம் நடத்தினர்.
இதில், கோயில் தர்மகர்த்தா சுப்பிரமணியன், சீர்காழி அரசு மருத்துவ அலுவலர் டாக்டர் பானுமதி, முன்னாள் நகர்மன்றத் தலைவர் கனிவண்ணன், டாக்டர் முத்துக்குமார், நகை வியாபாரிகள் சங்க மாநிலப் பொருளாளர் பரஞ்ஜோதி, ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சுப்பிரமணியன், ஆராமுதன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.