நாகப்பட்டினம்

வடமழையில் மக்கள் தொடர்பு நாள் முகாம்

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை    அடுத்த வடமழை ஊராட்சியில் மக்கள் தொடர்பு நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் தலைமை வகித்தார். சமுக பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர் வேலுமணி முன்னிலை வகித்தார். முகாமில் பயனாளிகளுக்கு வருவாய்த் துறை சார்பில் வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி, வேளாண்மை துறை சார்பில் ஆயில் என்ஜின்கள், தோட்டக்கலைத்துறை சார்பில் பலன் தரும் மரக்கன்றுகள், விதைகள் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன. நிகழ்ச்சியில், வட்டாட்சியர் ஸ்ரீதர், துணை வட்டாட்சியர்கள்  முருகு, ராஜா, வட்ட வழங்கல் அலுவலர் ஜெயசீலன், தனி வட்டாட்சியர் ராசேந்திரன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் சிவராமகிருஷ்ணன், வேளாண் அலுவலர் ராமநாதன், வருவாய் ஆய்வாளர் ரமேஷ், கிராம நிர்வாக அலுவலர் சங்கத் தலைவர் ரெங்கநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT