நாகப்பட்டினம்

திருமருகலில் திராவிடர் கழகத்தினர் சாலை மறியல்

DIN

பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து, நாகை மாவட்டம், திருமருகலில் திராவிடர் கழகம் சார்பில் சாலை மறியல் போராட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்தும், அவமதிப்பு செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியும் திருமருகல் பேருந்து நிலையம் முன்பாக இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது. 
திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் பூபேஸ் குப்தா தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் நெப்போலியன் முன்னிலை வகித்தார். திராவிடர் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
மறியலில் பங்கேற்ற 2 பெண்கள் உள்பட 15 பேரை திட்டச்சேரி போலீஸார் கைது செய்தனர். இந்தப் போராட்டம் காரணமாக, நாகை - நன்னிலம் சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து தடைபட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் உள்ளூர்க் கடையில் தாடியை 'டிரிம்' செய்துகொண்ட ராகுல் காந்தி!

மும்பை: 100 அடி உயர விளம்பரப் பலகை விழுந்து விபத்து -உயிரிழப்பு 14 ஆக உயர்வு

4-ஆம் கட்ட மக்களவைத் தோ்தல்: 67% வாக்குப் பதிவு -தோ்தல் ஆணையம் தகவல்

கோட் படத்தின் ’போஸ்ட் ப்ரொடக்‌ஷன்’ தொடங்கியது!

குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா -ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

SCROLL FOR NEXT