நாகப்பட்டினம்

உணவில் பல்லி: செவிலியர் பயிற்சி பள்ளி மாணவியருக்கு வாந்தி, மயக்கம்

DIN

நாகை அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவியருக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி கிடந்தது புதன்கிழமை காலை தெரியவந்தது. இந்த உணவை சாப்பிட்ட 14 மாணவிகள் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
நாகை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ளது நாகை அரசினர் செவிலியர் பயிற்சி பள்ளி. இந்தப் பள்ளியில் சுமார் 400 பேர் பயின்று வருகின்றனர். இப்பள்ளி மாணவியருக்கு, ஒப்பந்த அடிப்படையில் ஒரு கேன்டீன் மூலம் உணவு வழங்கப்படுவது வழக்கம். புதன்கிழமை காலை செவிலியர் பயிற்சி பள்ளி மாணவியருக்கு உணவு பரிமாறப்பட்டது. அப்போது, ஒரு மாணவிக்கு வழங்கப்பட்ட சட்னியில், பல்லி துண்டாகிக் கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து, பயிற்சி பள்ளி முதல்வர் ஐடா ராஜகுமாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, கேன்டீனில் காலை உணவருந்திய மாணவியர் 14 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக, அவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து, செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வரிடம் கேட்டபோது, சுகவீனம் அடைந்த மாணவியருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. உணவில் பல்லி கிடந்தது குறித்து, சுகாதாரத் துறை இணை இயக்குநருக்குப் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

SCROLL FOR NEXT