நாகப்பட்டினம்

மாநில அளவிலான பூப்பந்தாட்டப் போட்டி பரிசளிப்பு விழா

DIN

திருக்குவளை அருகேயுள்ள வலிவத்தில் நடைபெற்ற மாநில அளவிலான பூப்பந்தாட்ட  போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா வலிவலம் தேசிகர் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. 
வலிவலம் தேசிகர் மேல்நிலைப் பள்ளியில் (ஏப்ரல் 27,28) ஆகிய இருநாள்கள் சோழன் பூப்பந்தாட்ட கழகம் சார்பில் முதலாம் ஆண்டு மாநில அளவிலான ஆடவர் பூப்பந்தாட்டப் போட்டி நடைபெற்றது.  போட்டியில் முதலிடம் பெற்ற காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் (ஐஎஸ்டி) அணிக்கு ரூ. 12,000, 2-ஆம் இடம் பெற்ற சென்னை ஸ்பார்ட்டன் அணிக்கு ரூ. 10,000, 3-ஆவது இடம் பெற்ற சேலம் மாஞ்சோலை அணிக்கு ரூ. 8,000, 4-ஆம் இடம் பெற்ற மங்கநல்லூர் அணிக்கு ரூ. 6,000 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டன. 
சிறந்த விளையாட்டு வீரர்கள் மங்கைநல்லூர் சஞ்சய், சேலம் குணசேகர், சென்னை ஐஸ்வந்த், ஹரிஷ் ஆகியோருக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டன. 
அடுத்து, மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கப் பரிசுக்கான  காசோலையை  ஜூனியர் நேஷனல் ஸ்டார் ஆப் இந்தியா வீராங்கனை கண்ணிகா மற்றும் சீனியர் நேஷனல் ஸ்டார் ஆப் இந்தியா வீராங்கனைகள் மதுஷாலினி, நிரஞ்சனா, சீனியர் ஸ்டார் ஆப் இந்தியா வீரர் ஆதித்யன்  ஆகியோருக்கு  சோழன் பூப்பந்தாட்ட கழகத்தின் சார்பில் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஓட்டு கேட்ட மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: ராகுல்

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

SCROLL FOR NEXT