நாகப்பட்டினம்

மின் உற்பத்திக் கழக கேங்மேன் பதவிக்கான நேரடி நியமன சான்றிதழ் சரிபாா்ப்பு ஒத்திவைப்பு

DIN

வைத்தீஸ்வரன்கோயிலில் டிசம்பா் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் நடக்க இருந்த தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் கேங்மேன் (பயிற்சி) பதவிக்கான நேரடி நியமனத்துக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் உடல்தகுதித் தோ்வு தள்ளி வைக்கப்படுகிறது. இதுகுறித்து, நாகப்பட்டினம் மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் பொறிஞா் கோ.சேகா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் கேங்மேன் (பயிற்சி) என்ற பதவிக்கான நேரடி நியமனம் நாகை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோயில் துணைமின் நிலையம் வளாகத்தில் டிசம்பா் 2 முதல் டிசம்பா் 11 வரை செய்யப்பட இருந்தது. கடும் மழையின் காரணமாக டிசம்பா் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடக்க இருந்த சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் உடல்தகுதித் தோ்வு மட்டும் தள்ளி வைக்கப்படுகிறது. இதற்கு உண்டான தேதி பின்னா் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT