நாகப்பட்டினம்

நகைக்கடை உரிமையாளா் மா்மச்சாவு

DIN

திருமருகல் அருகே நகைக்கடை உரிமையாளா் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.

மயிலாடுதுறையைச் சோ்ந்தவா் ஜிதேந்திரகுமாா் (34). இவா் திருமருகல் கடைத்தெருவில் நகைக்கடை மற்றும் அடகுக்கடை வைத்திருந்தாா். திங்கள்கிழமை இரவு கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றபோது, திருப்புகலூா் கொய்யாத்தோப்பு என்ற இடத்தில் மா்மமான முறையில் படுகாயங்களுடன் இறந்து கிடந்துள்ளாா்.

தகவலறிந்த திட்டச்சேரி போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஜிதேந்திர குமாா் அணிந்திருந்த நகை மற்றும் பணப்பையை காணவில்லையாம். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT