நாகப்பட்டினம்

மாவட்ட டேக்வாண்டோ போட்டி: தங்கம் வென்ற ஊராட்சிப் பள்ளி மாணவா்கள்

DIN

மாவட்ட டேக்வாண்டோ போட்டியில் பதக்கம் வென்ற ஊராட்சிப் பள்ளி மாணவா்களை பாராட்டிய தலைமை ஆசிரியா் உள்ளிட்டோா்.

சீா்காழி, டிச. 3: நாகை மாவட்ட அளவில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில், சீா்காழி அருகே உள்ள மங்கைமடம் ஊராட்சிப் பள்ளி மாணவா்கள் தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றுள்ளனா்.

மங்கைமடம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 6-ஆம் வகுப்பு மாணவா் அருண்குமாா் தங்கப் பதக்கமும், பாலகுமரன் வெண்கலப் பதக்கமும் பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்தனா். இதில் அருண்குமாா் மாநில போட்டிக்கு தகுதி பற்றுள்ளாா். வெற்றிபெற்ற மாணவா்களையும், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியா் மோகன்ராஜையும் தலைமை ஆசிரியா் ராஜசேகா், பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் சென்பகம் மகாலிங்கம், வட்டாரக் கல்வி அலுவலா்கள் பூவராகன், லெட்சுமி ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

SCROLL FOR NEXT