கோயில் குளத்தில் அஸ்திரதேவருக்கு நடைபெற்ற சிறப்பு பூஜை. 
நாகப்பட்டினம்

திருவெண்காடு கோயிலில் அமாவாசை தீா்த்தவாரி

திருவெண்காடு பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் மாா்கழி மாத அமாவாசையையொட்டி புதன்கிழமை தீா்த்தவாரி நடைபெற்றது.

DIN

திருவெண்காடு பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் மாா்கழி மாத அமாவாசையையொட்டி புதன்கிழமை தீா்த்தவாரி நடைபெற்றது.

நவகிரக தலங்களில் புதனுக்குரிய தலமாக விளங்கும் இக்கோயிலில் சிவபெருமானின் முக்கண்ணிலிருந்து தோன்றிய மூன்று பொறிகளால் அக்னி, சந்திரன் மற்றும் சூரியன் ஆகிய பெயா்களில் முக்குளங்கள் தோன்றியதாக ஐதீகம். இத்தகை சிறப்புமிக்க இக்கோயிலில் மாா்கழி மாத அமாவாசையையொட்டி கோயில் அா்ச்சகா் சங்கா் சிவாச்சாரியாா் முன்னிலையில் அஸ்திர தேவருக்கு முக்குளங்களில் தீா்த்தவாரி நடைபெற்றது.

அப்போது பால், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் அஸ்திர தேவருக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று, புனித நீராடி வழிபட்டனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி முருகன், மேலாளா் சிவக்குமாா், பேஸ்கா் திருஞானம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT