நாகப்பட்டினம்

மரக்கன்றுகள் அளிப்பு

DIN

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பிரதாபராமபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு, ஹெல்பேஜ் இந்தியா அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
ஹெல்பேஜ் இந்தியா திட்ட மேலாண்மை அலகுத் தலைவர் வேணுகோபால் ராமலிங்கம், முதியோர்களுக்கான முதியோர் அமைப்பின் இயக்குநர் இளங்கோ ராஜரெத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண் துறை அலுவலர் தயாளன், விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். 
பிரதாபராமபுரம், காமேஸ்வரம், விழுந்தமாவடி, புதுப்பள்ளி, வேட்டைக்காரனிருப்பு, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மா, கொய்யா, எலுமிச்சை, தென்னை உள்பட பல்வேறு வகையான மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. முதியோர் நல இயக்கத் தலைவர் அருணாசலம் வரவேற்றார். தொண்டு நிறுவன திட்ட மேலாளர் குகன் ஏகாம்பரம் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT