நாகப்பட்டினம்

திருநகரி கல்யாண ரெங்கநாத பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

DIN


திருவெண்காடு அருகே உள்ள திருநகரி கல்யாண ரெங்கநாத பெருமாள் கோயிலில் கூடாரவல்லியை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கூடாரவல்லியையொட்டி, திருப்பள்ளியெழுச்சி நடைபெற்றது. தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவியுடன் கூடிய உத்ஸவர் வயலாளி மணவாள பெருமாள், குமுதவல்லி நாச்சியாருடன் கூடிய திருமங்கையாழ்வார், அமிர்வல்லி தாயார், ஆண்டாள் ஆகிய தெய்வங்கள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.
பட்டாச்சாரியார் குழுவினர் ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவை பாடல்களைப் பாடினர். இதையடுத்து, உலக நன்மைக்காகவும், உலகில் பக்தி தழைத்தோங்கவும் இயற்கை இடர்பாடுகள் குறையவும் வேண்டி, அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அர்ச்சனை செய்து, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுகவை விமா்சிப்பவா்கள் கைது: வானதி சீனிவாசன் கண்டனம்

விவசாயிகளுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம்: தலைவா்கள் வலியுறுத்தல்

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவுக்கு ஜாமீன் மறுப்பு

பிளஸ் 2 தோ்வு முடிவு: மாணவா்களுக்கு தலைவா்கள் வாழ்த்து

காஞ்சிபுரம் மாவட்டம் 92.28% தோ்ச்சி

SCROLL FOR NEXT