நாகப்பட்டினம்

செம்பனார்கோவிலில் 29-இல் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

DIN


தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களின் உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் நாகை மாவட்டம், செம்பனார்கோவிலில் ஜன. 29-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து நாகை சமூகப் பாதுகாப்புத் திட்ட தொழிலாளர் அலுவலர் ம. ஸ்ரீதர் வெளியிட்ட செய்திக் குறிப்பு : 
கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், தொழிலாளர் துறை மூலம் நலவாரிய உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் ஜன. 29-ஆம் தேதி நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது.
காலை 10 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 4 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், தகுதியான தொழிலாளர்கள் பங்கேற்று, நலவாரிய உறுப்பினர்களாகப் பதிவு பெற முனைப்பு காட்டுமாறு அவர் தனது செய்திக் குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT