கடற்கரை கையுந்து பந்து போட்டி: ஏ.வி.சி. கல்லூரி மாணவிகள் சாதனை
மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரி மாணவிகள் மாநில அளவில் நடைபெற்ற
மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரி மாணவிகள் மாநில அளவில் நடைபெற்ற பெண்களுக்கான கடற்கரை கையுந்து பந்து போட்டியில், முதலிடம் பெற்று 3-ஆவது ஆண்டாக தொடர்ந்து சாதனை படைத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடற்கரையில் மாநில அளவில் கல்லூரி மாணவிகளுக்கு இடையேயான 2 நாள் கடற்கரை கையுந்து பந்து போட்டி நடைபெற்றது. இதில், நாகை மாவட்டம் சார்பில் மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரியின் மூன்றாம் ஆண்டு கணிப்பொறியியல் துறை மாணவி ஆர். இளவரசி, மூன்றாம் ஆண்டு கணினி பயன்பாட்டியல் துறை மாணவி ஆர். மகாலெட்சுமி ஆகியோர் பங்கேற்று, மாநில அளவில் முதலிடம் பெற்றனர். இதன்மூலம் இக்கல்லூரி 3-ஆவது முறையாக தொடர்ந்து இந்த சாதனையைப் படைத்துள்ளது. வெற்றிபெற்ற மாணவிகளை ஏ.வி.சி. கல்லூரியின் ஆட்சிமன்றக் குழு தலைவர் என். விஜயரங்கன், செயலர் கே. கார்த்திகேயன், ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள், முதல்வர் ஆர். நாகராஜன், உடற்கல்வி இயக்குநர்கள் ஜே. ராஜ்குமார், எம். கீதா மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.