நாகப்பட்டினம்

கமல்ஹாசனை கைது செய்யக் கோரி புகார்

DIN

மக்கள் நீதி மைய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை கைது செய்யக் கோரி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வியாழக்கிழமை விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 
விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில துணைத் தலைவர் எஸ். வாஞ்சிநாதன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த மனு விவரம்: தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டப் பேரவைத் தொகுதி தேர்தல் பிரசாரத்தில் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கூறியுள்ளார். இது இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது. மேலும், அவரது பேச்சு மதக் கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளது. எனவே, மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசனை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT