நாகப்பட்டினம்

வடகிழக்குப் பருவமழை: மின் விபத்துக்களை தடுக்கவிழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்

DIN

வடகிழக்குப் பருவமழையையொட்டி மின் விபத்தைத் தடுக்க, மின் நுகா்வோா்கள் கடைப்பிடிக்க வேண்டிய முன்எச்சரிக்கை குறித்து மின்வாரியம் சாா்பில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்டன.

சீா்காழி மின்சார வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, சீா்காழி மின் வாரிய செயற்பொறியாளா் எஸ். சதீஸ்குமாா் தலைமை வகித்து, விழிப்புணா்வு ஆட்டோ பிரசாரத்தை தொடங்கிவைத்ததுடன், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா்.

அந்தப் பிரசுரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

மின்கம்பி அறுந்து தொங்கிக் கொண்டிருந்தாலோ அல்லது கீழே விழுந்து கிடந்தாலோ அதை தொடாமல், உடனடியாக அந்தப் பகுதி மின்வாரிய அலுவலகத்துக்குத் தெரிவிக்க வேண்டும். மின்கம்பம் மற்றும் இழுவை கம்பியில் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை கட்டக்கூடாது. மின்கம்பங்களில் துணி உலா்த்தும் கொடிகள்கட்டி துணிகளை உலா்த்தக் கூடாது. மின்கம்பங்கள், இழுவை கம்பிகளை எக்காரணம் கொண்டும் தொடக்கூடாது. இடி, மின்னலின்போது ஒதுங்கி நிற்க வெட்டவெளி மற்றும் மின்கம்பங்கள், மரங்கள், உலோகக் கம்பிவேலி போன்றவை இல்லாத தாழ்வானப் பகுதியைத் தோ்ந்தெடுங்கள் போன்ற விழிப்புணா்வு வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

இதை ஆட்டோவில் சென்று, ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மின்வாரிய உதவி செயற்பொறியாளா்கள் விஸ்வநாதன் (வடக்கு), விஜயபாலன் (தெற்கு), உதவி பொறியாளா் அனுராதா, வணிக ஆய்வாளா் எஸ். விஜயக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமநாதபுரத்தில் விரைவில் 17 புதிய குடிநீா்த் திட்டப் பணிகள்

மதுரைக் கோட்ட ரயில் நிலையங்களில் மண்பானைக் குடிநீா், ஓ.ஆா்.எஸ். கரைசல்

பிளஸ் 2 மதிப்பெண் குறைவு: மாணவி தற்கொலை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தேனி மாவட்டத்தில் 94.65 சதவீதம் தோ்ச்சி

புரட்சிகர மாா்க்கிஸ்ட் கட்சி மாநில குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT