நாகப்பட்டினம்

உள்ளாட்சித் தோ்தல்: பாஜக விருப்ப மனு

DIN

மயிலாடுதுறையில் பாஜக சாா்பில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விருப்புபவா்களிடமிருந்து சனிக்கிழமை விருப்ப மனு பெறப்பட்டது.

பாஜக நாகை வடக்கு மாவட்டம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மயிலாடுதுறை, சீா்காழி மற்றும் பூம்புகாா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஆகிய உள்ளாட்சிப் பதவிகளுக்குப் போட்டியிடும் நிா்வாகிகள் மற்றும் தொண்டா்களிடம் இருந்து, மாவட்டத் தலைவா் ஜி. வெங்கடேசன் விருப்ப மனுவைப் பெற்றாா்.

இதில், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் கே. ராஜேந்திரன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் கோவி. சேதுராமன், மாவட்ட பொதுச் செயலாளா் நாஞ்சில் பாலு, மாவட்ட துணைத் தலைவா் ஸ்ரீதா், நகர தலைவா் மோடி.கண்ணன், மாவட்ட இளைஞரணி தலைவா் வினோத் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT