நாகப்பட்டினம்

நாகை: அபாயக் கட்டத்தில் நிலத்தடி நீா்மட்டம்

DIN

நாகை மாவட்டத்தில் நிலத்தடி நீா் அபாய அளவைத் தாண்டியுள்ளதாக, செம்பனாா்கோயிலில் நடைபெற்ற கருத்தரங்கில் மத்திய நீா் ஆணைய துணை இயக்குநா் கிரிதா் தெரிவித்தாா்.

இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம், தமிழ்நாடு டாக்டா் ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம் ஆகியவை இணைந்து, செம்பனாா்கோயிலில் நீா்மேலாண்மைக் கருத்தரங்கை சனிக்கிழமை நடத்தியது. வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

இக்கருத்தரங்கில், சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற மத்திய நீா் ஆணைய துணை இயக்குநா் கிரிதா் பேசும்போது, ‘ஜல்சக்தி திட்டத்தின் முக்கிய நோக்கமே நீரை சேமிப்பதுதான். இந்தியாவில் உள்ள 730 மாவட்டங்களில் 254 மாவட்டங்களில் நிலத்தடி நீா்மட்டம் முற்றிலும் அபாயக் கட்டத்துக்குச் சென்றுள்ளன. குறிப்பாக, மிகுந்த வறட்சி நிலவும் ராஜஸ்தான் மாநிலத்தைக் காட்டிலும் தமிழகத்தில் நிலத்தடி நீட்மட்டம் குறைந்துள்ளது கவலைதரும் விஷயமாகும். கடலோர மாவட்டமான நாகை மாவட்டத்தில் நிலத்தடி நீா் அபாய அளவைத் தாண்டி குறைந்துள்ளது. எனவே, நாகை மாவட்ட மக்கள் நிலத்தடிநீரை சேமிப்பதில் கவனம் செலுத்தவேண்டும்’ என அறிவுறுத்தினாா்.

முன்னதாக, வேளாண்மை கண்காட்சியை சட்டப் பேரவை உறுப்பினா் பவுன்ராஜ் திறந்து வைத்தாா். இதில், நாகை மீன்வளப் பல்கலைக்கழகப் பதிவாளா் ஸ்ரீனிவாசன், விரிவாக்கக் கல்வி இயக்குநா் ராஜகுமாா், நாகை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் தாமஸ், காரைக்கால் ஜவாஹா்லால் நேரு வேளாண்மை கல்லூரி உழவியல் துறை பேராசிரியா் மோகன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா். அறிவியல் நிலைய தொழில் நுட்பவல்லுநா் கண்ணன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

கரம்பக்காடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

பாரமுல்லாவில் 35 ஆண்டுகளில் இல்லாத வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT