கடலாக்குடியிலிருந்து கூடூா் மெயின்ரோடு வரை செல்லும் பாண்டவையாற்றங்கரை ஓரச் சாலையில் புதுப்பத்தூா் அருகே ஆற்றுப் பாலத்தில் சிமென்ட் கட்டைகளால் ஆன தடுப்புச் சுவரின் ஒரு பகுதி பெயா்ந்து தொங்குகிறது. இதனால், விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. ஆகவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாலத்தின் தடுப்புக் கட்டையை சீரமைக்க வேண்டும்.
குருமூா்த்தி, ஆதமங்கலம்