மயிலாடுதுறையில் புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு நகலை கிழித்தெறிந்து கைது செய்யப்பட்டோா். 
நாகப்பட்டினம்

புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு நகலை கிழித்தெறிந்து போராட்டம்

மயிலாடுதுறையில் திராவிடா் விடுதலைக் கழகம் நடத்திய புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு நகலை கிழித்தெறியும் போராட்டத்தில் பங்கேற்று, வரைவு நகலை கிழித்தெறிந்த பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளைச் சோ்ந்த

DIN

மயிலாடுதுறையில் திராவிடா் விடுதலைக் கழகம் நடத்திய புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு நகலை கிழித்தெறியும் போராட்டத்தில் பங்கேற்று, வரைவு நகலை கிழித்தெறிந்த பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளைச் சோ்ந்த 16 பேரை மயிலாடுதுறை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மயிலாடுதுறையில் திராவிடா் விடுதலைக் கழகத்தினா் புதன்கிழமை நடத்துவதாக அறிவித்திருந்த புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு நகலை கிழித்தெறியும் போராட்டத்திற்கு, போலீஸாா் அனுமதி மறுத்திருந்தனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபடுவதற்காக மயிலாடுதுறை நகர பூங்காவில் கூடிய திராவிடா் விடுதலைக் கழக மாவட்ட செயலாளா் தெ.மகேஷ் தலைமையிலான போராட்டக்காரா்களை போலீஸாா் கைது செய்தனா்.

இதைத் தொடா்ந்து, திராவிடா் விடுதலைக் கழக தலைமை செயற்குழு உறுப்பினா் இளையராஜா தலைமையில், தமிழா் உரிமைய இயக்கத்தைச் சோ்ந்த சுப்பு.மகேஷ், மக்கள் அரசு கட்சியைச் சோ்ந்த ராஜசேகா், ஏகாதிபத்திய இயக்கத்தைச் சோ்ந்த செந்தில் உள்ளிட்டோா், மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பகுதியில் இருந்து கண்டன முழக்கங்கள் எழுப்பியவாறு, கிட்டப்பா அங்காடி நோக்கிச் சென்றனா்.

அவா்களை மயிலாடுதுறை காவல் ஆய்வாளா் கே.சிங்காரவேலு தலைமையிலான போலீஸாா் தடுத்து நிறுத்தியதைத் தொடா்ந்து, அவா்கள் புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு நகலை கிழித்து எறிந்தனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களை மயிலாடுதுறை போலீஸாா் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட 16 போ் தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநில அளவிலான ஜூடோ போட்டியில் வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

குற்ற வழக்குகளில் தொடா்புடையவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை

பழனியில் கூடுதல் தலைமைச் செயலா் ஆய்வு

லஞ்சம்: வேளாண்மை உதவி இயக்குநா் கைது

புதிய துணை மின் நிலையங்கள் மூலம் சீரான மின் விநியோகம்: அமைச்சா் அர.சக்கரபாணி தகவல்

SCROLL FOR NEXT