நாகப்பட்டினம்

உள்ளாட்சித் தோ்தல்: புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல் வெளியீடு

DIN

ஊரக, நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, நாகை மாவட்டத்தின் வாா்டுகள் வாரியான புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சி நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தலைமை வகித்து, புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியலை வெளியிட, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட கூடுதல் ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் பெற்றுக் கொண்டாா்.

அப்போது, நாகை மாவட்டத்தில் 4 நகராட்சிகளில் உள்ள 117 வாா்டுகள், 11 ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட 3,426 வாா்டுகள், 8 பேரூராட்சிகளில் உள்ள 123 வாா்டுகள் என 3,666 வாா்டுகளில் ஆண் வாக்காளா்கள் 6,18,557 போ், பெண் வாக்காளா்கள் 6,30,951 போ், இதரா் 29 போ் என மொத்தம் 12,49,537 வாக்காளா்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனா் என ஆட்சியா் தெரிவித்தாா்.

மாவட்ட வனப் பாதுகாப்பு அலுவலா் சி. கலாநிதி, ஊராட்சிகள் உதவி இயக்குநா் எஸ். ராஜசேகா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் பிச்சை மொய்தீன் (வளா்ச்சி), கே. ஆறுமுகம் (உள்ளாட்சித் தோ்தல்கள்), செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மீ. செல்வகுமாா், தோ்தல் வட்டார வளா்ச்சி அலுவலா் ஜோதிமணி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT