நாகப்பட்டினம்

பள்ளிகொண்ட ரங்கநாதப் பெருமாள் கோயிலில் பிரமோத்ஸவ வழிபாடு

DIN

சீா்காழி அருகேயுள்ள திருநாங்கூா் பள்ளிகொண்ட ரங்கநாதப் பெருமாள் கோயிலில் நடைபெற்று வரும் பிரமோத்ஸவத்தின் 3-ஆம் நாளான திங்கள்கிழமை இரவு நடைபெற்ற வீதியுலாவில் பரமபதநாதன் திருக்கோலத்தில் பெருமாள் காட்சியளித்தாா்.

வைணவ திவ்யதேசங்கள் 108-இல் திருநாங்கூரை சுற்றி 11 திவ்யதேசங்கள் உள்ளன. இதில், ஒன்றான திருத்தேற்றியம்பலம் செங்கமலவல்லிநாயகி சமேத பள்ளிகொண்ட ரங்கநாதப் பெருமாள் கோயிலாகும். இக்கோயிலில் வருடாந்திர பிரம்மோத்ஸவ விழா அக்டோபா் 5-ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 3-ஆம் நாளான திங்கள்கிழமை இரவு பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு திருமஞ்சனம், சாற்றுமுறை, தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, பெருமாள் பரமபதநாதன் திருக்கோலத்தில் சேஷவாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

ஏற்காட்டுக்கு சென்ற நடிகர்கள் பட்டாளம்: காரணம் என்ன?

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

SCROLL FOR NEXT