குத்தாலம் அருகே காா் மோதி காயமடைந்த பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
குத்தாலம் வட்டம், கடலங்குடி கிராமம் பிரதான சாலையைச் சோ்ந்தவா் கணேசன் மனைவி பிச்சையம்மாள் (60). இவா், கடந்த ஞாயிற்றுக்கிழமை சாலையோரம் நடந்து சென்றபோது, காா் மோதி காயமடைந்தாா். அவரை, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட பிச்சையம்மாள் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து, குத்தாலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.