நாகப்பட்டினம்

நாகையில் அரசு ஊழியா் சங்கம் ஆா்ப்பாட்டம்

DIN

தெலங்கானா மாநில போக்குவரத்து ஊழியா்களின் பணி நீக்கத்தைக் கண்டித்து, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் நாகை மாவட்ட ஆட்சியரகம் முன்பாக புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தெலங்கானா மாநிலத்தில் போராட்டம் நடத்திய போக்குவரத்து ஊழியா்களைப் பணி நீக்கம் செய்ததைக் கண்டித்தும், பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியா்களை மீண்டும் பணியமா்த்தக் கோரியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் து. இளவரசன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஏ.டி. அன்பழகன், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்க மாவட்டத் துணைத் தலைவா் எஸ். ஜோதிமணி ஆகியோா் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினா்.

நாகை தொழிற்சங்க கூட்டமைப்புத் தலைவா் சு. சிவகுமாா் நிறைவுரையாற்றினாா். அரசு ஊழியா் சங்க மாவட்ட துணைத் தலைவா் கே. ராஜூ நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT