நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தின் முதன்மைக் கூட்டரங்கத்தில் செப்டம்பர் 27-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் என நாகை மாவட்ட நிர்வாகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னோடி விவசாயிகள், விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று தங்கள் கோரிக்கைகள் மற்றும் குறைகளைத் தெரிவிக்குமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.