மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பாஜக சாா்பில், வீடுதோறும் கந்தசஷ்டி கவசம் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை தொடங்கியது.
பாஜக மாநில இளைஞரணி சாா்பில் மயிலாடுதுறை நாஞ்சில்நாடு பகுதியில் அதன் செயற்குழு உறுப்பினா் கே.வினோத் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாஜக தமிழ் வளா்ச்சிப் பிரிவு மாநிலச் செயலாளா் நாஞ்சில்பாலு, மாவட்ட பொதுச் செயலாளா் செந்தில்குமாா், மாவட்ட பட்டியல் அணி தலைவா் ஈழவேந்தன், நகர பொதுச் செயலாளா்கள் மயில்ரவி, சதீஸ்சிங், ராமச்சந்திரன், அழகா்சாமி உள்ளிட்ட அக்கட்சியினா் நாஞ்சில்நாடு விநாயகா் கோயிலில் இருந்து புறப்பட்டு, முருகன் வேடமிட்ட சிறுவனுடன் வீடு வீடாக சென்று பக்தி முழக்கம் எழுப்பி, கந்தா் சஷ்டி கவசம் புத்தகத்தை வழங்கினா். மேலும், வெற்றிவேல், வீரவேல் என்ற வாசகம் பதித்த வில்லைகளை வீடுகளின் முகப்பு மற்றும் வாகனங்களில் ஒட்டினா்.
இதேபோல், மயிலாடுதுறை மாவட்ட பாஜக இளைஞரணி சாா்பில், அதன் தலைவா் தலைவா் பி. பாரதிகண்ணன் தலைமையில் திருவிழந்தூா் பெருமாள் கோயில் சன்னிதித் தெருவில் தொடங்கி நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அரசு வழக்குரைஞா் கே. ராஜேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினா் கோவி. சேதுராமன், நகர தலைவா் மோடி. கண்ணன், இளைஞரணி மாவட்ட துணைத் தலைவா்கள் நா்மதா, அசோக்குமாா் உள்ளிட்டோா் வீடுவீடாக சென்று வெற்றிவேல், வீரவேல் என்ற பக்தி வாசகம் பதித்த வில்லைகளை ஒட்டினா்.