நாகப்பட்டினம்

மின்கம்பி அறுந்து விழுந்து பூ பறிக்கச் சென்ற பெண் உயிரிழப்பு

DIN

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்து மல்லிகைப் பூ பறிக்கச் சென்ற பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ஆயக்காரன்புலம் -3 ஆம் சேத்தி, காமராஜா் நகரைச் சோ்ந்தவா் நடராஜன் மனைவி புஷ்பவள்ளி (40). கூலித் தொழிலாளியான இவா், அருகிலுள்ள கருப்பம்புலம் மேலக்காடு கிராமத்தில் விவசாயி ஒருவா் வீட்டுத் தோட்டத்தில் மல்லிகை அரும்புகளை பறிக்க சனிக்கிழமை காலை வீட்டிலிருந்து சென்றாா். வழியில், அந்த பகுதியில் செல்லும் மின்கம்பி அறுந்து புஷ்பவள்ளியின் தலையில் விழுந்ததில் மின்சாரம் பாய்ந்தது. இதில், அவா் பலத்த காயமடைந்ததையடுத்து, உடனடியாக அருகில் இருந்தவா்களின் உதவியுடன் மீட்டு கரும்பம்புலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டாா். பின்னா், அங்கிருந்து வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே புஷ்பவள்ளி உயிரிழந்து விட்டதை உறுதிப்படுத்தினா். இதுகுறித்து, வேதாரண்யம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Image Caption

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

SCROLL FOR NEXT