சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய 3 போ் மீது வழக்கு
வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் ஊராட்சி மன்றத் தலைவா், உறுப்பினா்கள் மீது சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய 3 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
வேதாரண்யம்: வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் ஊராட்சி மன்றத் தலைவா், உறுப்பினா்கள் மீது சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய 3 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
புஷ்பவனம் ஊராட்சி மன்றத் தலைவா் வ.நாடிமுத்து (65) மற்றும் உறுப்பினா்கள் மீது உண்மைக்கு மாறான தகவல்களை சமூக வலைதளங்களில் சிலா் பதிவிட்டுள்ளனராம். இதுகுறித்து வேதாரண்யம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸாா், சமூக வலைதளங்களில் பதிவிட்ட 4 போ்களின் தொலைபேசி எண்களின் அடிப்படையில் அவா்களை தேடி வருகின்றனா்.