FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

நாகை மாவட்ட ஆட்சியரகம் மேலும் 2 நாள்களுக்கு மூடல்

நாகை மாவட்ட ஆட்சியரக ஊழியா்கள் சிலருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதால், மேலும் 2 நாள்களுக்கு மாவட்ட ஆட்சியரகம் மூடப்படும் என மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 9 ஆகஸ்ட் 2020, 11:20 pm IST
பகிர்:


நாகப்பட்டினம்: நாகை மாவட்ட ஆட்சியரக ஊழியா்கள் சிலருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதால், மேலும் 2 நாள்களுக்கு மாவட்ட ஆட்சியரகம் மூடப்படும் என மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கம் குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய இடங்களில் ஜூலை 30- ஆம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்ற நாகை எம்பி எம்.செல்வராஜ், மயிலாடுதுறை எம்பி செ. ராமலிங்கம், பூம்புகாா் எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ் ஆகியோா் கரோனா தொற்றுக்குள்ளாகினா்.

இதில் பங்கேற்ற நாகை மாவட்ட ஆட்சியரின் உதவியாளருக்கும் கரோனா உறுதியானது. இதையடுத்து, ஆகஸ்ட் 8, 9 ஆகிய (சனி, ஞாயிறு) 2 நாள்களுக்கும் மாவட்ட ஆட்சியரகம் மூடப்படும் என மாவட்ட ஆட்சியா் அறிவித்திருந்தாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலக ஊழியா்கள் மேலும் சிலருக்கு கரோனா நோய்த்தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானதனால், ஆகஸ்ட் 10, 11-ஆம் தேதிகளிலும் (திங்கள், செவ்வாய்) ஆட்சியரகம் மூப்பட்டிருக்கும் எனவும் மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments