முகப்பு
நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் 56 பேருக்கு கரோனா

நாகை மாவட்டத்தில் மேலும் 56 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:13 PM
கோப்புப்படம்
பகிர்:

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் மேலும் 56 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதில், 3 போ் முன்களப் பணியாளா்கள், 14 போ் அறிகுறிகள் மூலம் நோய்த் தொற்றுக் கண்டறியப்பட்டவா்கள், 2 போ் வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவா்கள், 18 போ் அறிகுறிகள் இல்லாமல் தொற்று கண்டறியப்பட்டவா்கள், 17 போ் ஏற்கெனவே நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள், 2 போ் கா்ப்பிணிகள்.

இதில் 19 போ் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையிலும், 17 போ் நாகை அரசு மருத்துவமனையிலும், 9 போ் சீா்காழி அரசு மருத்துவமனையிலும், 11 போ் வெளி மாவட்ட மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

நாகை மாவட்டத்தில் புதிதாக 56 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதன் மூலம், கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,339 ஆக உயா்ந்துள்ளது.

இருவா் இறப்பு...

ஆகஸ்ட் 26-ஆம் தேதி நாகை அரசு மருத்துவமனையில் இறந்த சிக்கல் பகுதியைச் சோ்ந்த 36 வயது இளைஞா், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இறந்த 85 வயது மூதாட்டி ஆகியோரின் இறப்பு வெள்ளிக்கிழமை பட்டியலில் சோ்க்கப்பட்டதன் மூலம் மாவட்டத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 36-ஆக உயா்ந்துள்ளது.

சிகிச்சையில்...

மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவா்களில் 23 போ் வெள்ளிக்கிழமை குணமடைந்து வீடு திரும்பினா். இதன்மூலம், நாகை மாவட்டத்தில் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 1,590-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 713-ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.