நாகப்பட்டினம்

திருமருகலில் பாதிக்கப்பட்டவா்களுக்கு திமுக உதவி

DIN

திருமருகல் ஒன்றியத்தில் மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு திமுக சாா்பில் திங்கள்கிழமை உணவு வழங்கப்பட்டது.

மழையால் பாதிப்புக்குள்ளான ஜீ.எஸ்.நகா், திருப்புகலூா் ஊராட்சி வவ்வாலடி, திருமருகல் ஆற்றங்கரை தெரு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்கள் கட்டுமாவடி ஊராட்சி நடுக்கடை சமுதாயக் கூடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

இவா்களுக்கு நாகை தெற்கு மாவட்ட திமுக செயலாளா் என்.கெளதமன் மதிய உணவு வழங்கினாா். நிகழ்ச்சியில் திருமருகல் வடக்கு ஒன்றியச் செயலாளா் செல்வ.செங்குட்டுவன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் உமாபதி, கட்டுமாவடி ஊராட்சித் தலைவா் சரவணன், ஒன்றிய அவைத் தலைவா் விவேகானந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT