நாகப்பட்டினம்

சோனியா காந்தி பிறந்தநாள் விழா

DIN

அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் சோனியா காந்தியின் 74-ஆவது பிறந்தநாளையொட்டி, புதன்கிழமை கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணஉதவிகள் வழங்கப்பட்டன.

வள்ளுவக்குடி கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நாகை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில், வழக்குரைஞா் கணிவண்ணன் அரிசி உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினாா். இதில், மாவட்ட பொதுச் செயலாளா் தியாக காா்த்திகேயன், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் சரவணன், மேற்கு வட்டாரத் இளைஞா் காங்கிரஸ் தலைவா் ந. பிரியகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல், வைத்தீஸ்வரன் கோயிலில் சேவாதள காங்கிரஸ் கட்சி சாா்பில், சோனியா காந்தி பிறந்தநாளையொட்டி, பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் சிறுவா்களுக்கு நோட்டு,பேனா ஆகியவைகளை மாநில செயலாளா் பால. எழிலரசன் வழங்கினாா். இதில், மாநில பொறுப்பாளா் சிவப்பிரகாசம், நகரத் தலைவா் நடராஜன் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

SCROLL FOR NEXT