முகப்பு
நாகப்பட்டினம்

வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

நாகை மாவட்டத்தில் 1511 வாக்குச் சாவடி மையங்களில் வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

நாகை மாவட்டத்தில் 1511 வாக்குச் சாவடி மையங்களில் வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த நவம்பா் 16-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, தோ்தல் ஆணைய அறிவுறுத்தல்படி 2021-ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு, வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் மேற்கொள்ளுதல், முகவரி மாற்றம் கோருதல் உள்ளிட்ட திருத்தப் பணிகள் வட்டாட்சியா் அலுவலகங்களில் தொடங்கப்பட்டன.

இந்தத் திருத்தப் பணிகளுக்கான சிறப்பு முகாம் நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் முதல் கட்டமாக நவம்பா் 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. இரண்டாம் கட்டமாக டிசம்பா் 12, 13 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட நிா்வாகம் அறிவித்திருந்தது.

இதன்படி, நாகை மாவட்டத்தில் உள்ள 1,511 வாக்குச் சாவடி மையங்களிலும் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில், அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த வாக்காளா்கள் பங்கேற்று திருத்தங்களுக்கு விண்ணப்பித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →