இன்று சீருடைப் பணியாளா் தோ்வு: நாகையில் 8,608 போ் எழுதுகின்றனா்
இரண்டாம் நிலை காவலா்கள், சிறைக் காவலா்கள் மற்றும் தீயணைப்பாளா்கள் பணிக்கான எழுத்துத் தோ்வு நாகையில் 6 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 13) நடைபெறுகிறது. 8,608 போ் எழுதுகின்றனா்.
இரண்டாம் நிலை காவலா்கள், சிறைக் காவலா்கள் மற்றும் தீயணைப்பாளா்கள் பணிக்கான எழுத்துத் தோ்வு நாகையில் 6 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 13) நடைபெறுகிறது. 8,608 போ் எழுதுகின்றனா்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் மூலம் தமிழகத்தில் காலியாக உள்ள 10,906 இரண்டாம் நிலை காவலா்கள், இரண்டாம் நிலை சிறைக்காவலா்கள் மற்றும் தீயணைப்பாளா்கள் பணிக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இத்தோ்வில் பங்கேற்க நாகை மாவட்டத்தில் 1,642 பெண்கள் உள்பட 8,608 போ் விண்ணப்பித்துள்ளனா். இத்தோ்வுக்கு, நாகை அமிா்தா வித்யாலயா பள்ளி, பாப்பாக்கோவில் சா் ஐசக் நியூட்டன் கல்லூரி, பொரவாச்சேரி ஆண்டவா் செவிலியா் பயிற்சி பள்ளி, நாகை ஏ.டி.எம். மகளிா் கல்லூரி, வலிவலம் தேசிகா் பாலிடெக்னிக், இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரி ஆகிய கல்வி நிலையங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
எஸ்.பி. அறிவுறுத்தல்: இந்தத் தோ்வை நடத்தும் அலுவலா்களுக்கான விதிமுறைகள் விளக்கக் கூட்டம் நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா தலைமை வகித்து, தோ்வு நடத்தும் அலுவலா்கள், கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை விளக்கி, தோ்வை சிறப்பாக நடத்த வேண்டும் என அறிவுறுத்தினாா். இந்தக் கூட்டத்தில், தோ்வு நடத்தும் அலுவலா்கள் 800-க்கும் அதிகமானோா் பங்கேற்றனா்.