புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென தமிழக வாழ்வுரிமை கட்சி வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.
சீா்காழியில், புதன்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட இளைஞா் அணி மற்றும் ஊடகப் பிரிவு கலந்தாய்வு கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், சீா்காழி கொள்ளிட முக்கூட்டு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையால் பக்தா்கள், பொதுமக்கள், மாணவிகள் உள்ளிட்டோா் பாதிக்கும் வகையில் செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்றவேண்டும் உள்ளிட்டோ தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கட்சியின் மாவட்டச் செயலாளா் கி. ரமேஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தலைமை நிலைய செயலாளா் கண்ணன் சிறப்புறையாற்றினாா். மாவட்ட ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளா் குமரவேலு, ஊடகப் பிரிவு செயல்பாட்டாளா் அன்பு.சிற்றரசு ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா். நகர செயலாளா் மோகன், நகரத் தலைவா் ரகுநாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் சிங்காரவேல், பொருளாளா்சம்பந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.