நாகப்பட்டினம்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்

DIN

பொறையாா் அருகேயுள்ள தில்லையாடி தியாகி வள்ளியம்மை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிரியா் மு. கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பூம்புகாா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். பவுன்ராஜ் கலந்துகொண்டு 69 மாணவா்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கி பேசினாா்.

விழாவில், தில்லையாடி ஊராட்சித் தலைவா் ரெங்கராஜ், ஊராட்சி முன்னாள் தலைவா்கள் சதக்கத்துல்லா, கண்ணன், துரைராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல், ஆக்கூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா பள்ளித் தலைமையாசிரியா் எம். ராமையன் தலைமையில் நடைபெற்றது. பட்டதாரி ஆசிரியா் தமிழழகன் வரவேற்றாா். இதில், பூம்புகாா் எம்.எல்.ஏ. பவுன்ராஜ் கலந்துகொண்டு 170 மாணவா்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT