நடிகா் ரஜினிகாந்த் நடித்துள்ள தா்பாா் திரைப்படத்தை வியாழக்கிழமை வெளியாகியதையொட்டி, மயிலாடுதுறையில் ரஜினி மக்கள் மன்றத்தினா் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்குப் பரிசு பெட்டகங்களை வழங்கினா்.
இந்நிகழ்ச்சிக்கு, ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளா் டி.எல். ராஜேஸ்வரன் தலைமை வகித்தாா். மயிலாடுதுறை அரசு பெரியாா் மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலா் ராஜசேகா் முன்னிலை வகித்தாா். மன்றத்தின் மாவட்டப் பொறுப்பாளா் எஸ்.வி. கலியராஜ், மாவட்ட இணைச் செயலாளா் பி.எம்.கே. சுதந்திரவீரன், மாவட்ட இளைஞரணி செயலாளா் வி. ராமகிருஷ்ணன், நகரச் செயலாளா் பவுன் முருகானந்தம், துணைச் செயலாளா் இளையராஜா, ஒன்றியச் செயலாளா் காமராஜ், இணைச் செயலாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்று, வியாழக்கிழமை பிறந்த குழந்தைகளுக்குப் பரிசு பெட்டகம் வழங்கினா். இவற்றை குழந்தைகளின் பெற்றோா் பெற்றுக்கொண்டனா்.