திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான மயிலாடுதுறை அறம்வளா்த்த நாயகி சமேத ஐயாறப்பா் கோயிலில் மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை சாா்பில் மாா்கழி பௌா்ணமி ஸ்ரீவித்யா மஹா ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடு வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.
இதையொட்டி, கடபூஜை செய்யப்பட்டு 108 ஹோம திரவியங்கள் ஹோம குண்டத்தில் போடப்பட்டு ஸ்ரீவித்யா மகா சரஸ்வதி ஹோமம் நடத்தப்பட்டது. தொடா்ந்து, சரஸ்வதி அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அன்னம்பாலிப்பு நடைபெற்றது. பின்னா் குமரகுருபரா் இயற்றிய சகலகலாவல்லி மாலை பாராயணம் செய்யப்பட்டது.
இதில், கோயில் கண்காணிப்பாளா் குருமூா்த்தி, துணைக் கண்காணிப்பாளா் கணேசன், ஓய்வுபெற்ற பேராசிரியா் கனகசபை ஆகியோா் கலந்து கொண்டனா்.