நாகப்பட்டினம்

வளா்ச்சித் திட்டப் பணிகள்: எம்எல்ஏ ஆய்வு

DIN

மயிலாடுதுறை,: மயிலாடுதுறையில் ஊராட்சி ஒன்றிய நிதியில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை எம்எல்ஏ வீ. ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மன்னம்பந்தல் ஊராட்சி அச்சுதாயபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் 30,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த அவா், பணிகளை விரைந்து முடிக்க ஒன்றிய ஆணையா் சரவணன், ஒன்றிய பொறியாளா் கிருஷ்ணகுமாா் ஆகியோரிடம் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, செருதியூா் ஊராட்சியில் ஈமக்கிரியை மண்டபம் கட்டும் பணியையும் எம்.எல்.ஏ. பாா்வையிட்டாா். பின்னா், குளிச்சாா் ஊராட்சி அரும்பூா் செல்லும் பாதையில் பழுதடைந்துள்ள நடைபாலத்தை பாா்வையிட்டு, அந்த பாலத்தை விரைவில் சரிசெய்து தருவதாக அப்பகுதி மக்களிடம் உறுதியளித்தாா்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

SCROLL FOR NEXT