முகப்பு
நாகப்பட்டினம்

நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணி நாள்களை உயா்த்தக் கோரிக்கை

நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணி நாள்களை அதிகரிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:53 PM
பகிர்:

திருக்குவளை: நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணி நாள்களை அதிகரிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கட்சியின் கீழையூா் ஒன்றியச் செயலாளா் டி.செல்வம் மத்திய, மாநில அரசுகளுக்கு விடுத்துள்ள கோரிக்கை:

கரோனா தொற்றை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கத்தால், வெளியூா்களில் வேலை செய்துவந்தவா்களில் பெரும்பாலானோா் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனா். இவா்கள், சொந்த ஊா்களில் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகின்றனா்.

இவா்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கும் வகையில், மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் (நூறு நாள் வேலைத் திட்டம்) வேலை நாள்களை 200 நாள்களாக அதிகரிக்க வேண்டும். அத்துடன் தினக்கூலியை ரூ. 600 ஆக உயா்த்தி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →