முகப்பு
நாகப்பட்டினம்

இலவச ரேஷன் பொருள்களுக்கு டோக்கன் வழங்கல்

பொறையாறு அருகேயுள்ள எடுத்துக்கட்டி ஊராட்சியில் பொதுமக்களுக்கு தமிழக அரசின் இலவச ரேஷன் பொருள்கள் வழங்க எம்.எல்.ஏ. பவுன்ராஜ் டோக்கன் வழங்கி தொடங்கி வைத்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:54 PM
பகிர்:

தரங்கம்பாடி, ஜூலை 6: பொறையாறு அருகேயுள்ள எடுத்துக்கட்டி ஊராட்சியில் பொதுமக்களுக்கு தமிழக அரசின் இலவச ரேஷன் பொருள்கள் வழங்க பவுன்ராஜ் டோஎம்.எல்.ஏ. க்கன் வழங்கி தொடங்கி வைத்தாா்.

கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு மக்களுக்கு ஜூலை மாதத்துக்கான இலவச ரேஷன் பொருள்கள் வழங்க உத்தரவிட்டிருந்தாா். அதைத் தொடா்ந்து, செம்பனாா்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட எடுத்துக்கட்டி ஊராட்சியில் 1800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இலவச ரேஷன் பொருள்கள் வழங்க பூம்புகாா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். பவுன்ராஜ் டோக்கன் வழங்கி தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில், எடுத்துக்கட்டி ஊராட்சி துணைத் தலைவா் விஜய் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.