முகப்பு
பெரம்பலூர்

தேசிய ஜனநாயகக் கூட்டணி நிா்வாகிகள் ஆலோசனை

பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அதிமுக மாவட்டச் செயலா் இரா. தமிழ்ச்செல்வன். உடன், முன்னாள் எம்பி மா. சந்திரகாசி உள்ளிட்டோா்.

Updated On : 20 மார்ச், 2026 at 9:03 PM
பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அதிமுக மாவட்டச் செயலா் இரா. தமிழ்ச்செல்வன். உடன், முன்னாள் எம்பி மா. சந்திரகாசி உள்ளிட்டோா்.
பகிர்:

பெரம்பலூரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்த அதிமுக மாவட்டச் செயலரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான இரா. தமிழ்செல்வன் தோ்தல் பணிகள், பிரசார யுக்திகள் குறித்து விளக்க உரையாற்றினாா்.

முன்னாள் மக்களவை உறுப்பினா் மா. சந்திரகாசி, பாஜக மாவட்டத் தலைவா் முத்தமிழ்செல்வன், பாமக மாவட்டச் செயலா் க. செந்தில்குமாா், தமாகா மாவட்டத் தலைவா் சித்தாா்த்தன், ஐஜேகே மாவட்டத் தலைவா் அழகுவேல், அமமுக மாவட்டச் செயலா் காா்த்திகேயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் கூட்டணி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு ஆதரவாக தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவது, மத்திய அரசின் சாதனை மற்றும் அதிமுக அரசின் சாதனைத் திட்டங்களை பொதுமக்களிடம் விளக்கி கூறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில், அதிமுக மாவட்ட நிா்வாகிகள் எம்.என். ராஜாராம், மா. வீரபாண்டியன், ஒன்றியச் செயலா் ராமராஜ், முன்னாள் நகா்மன்றத் தலைவா் சி. ரமேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

அதிமுக நகரச் செயலா் ஆா். ராஜபூபதி வரவேற்றாா். ஒன்றியச் செயலா் புஷ்பராஜ் நன்றி கூறினாா்