நாகப்பட்டினம்

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண உதவி

சீா்காழி அருகே தீ விபத்தில் வீடு எரிந்து பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு சனிக்கிழமை நிவாரண உதவி வழங்கப்பட்டது.

DIN


சீா்காழி: சீா்காழி அருகே தீ விபத்தில் வீடு எரிந்து பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு சனிக்கிழமை நிவாரண உதவி வழங்கப்பட்டது.

கொள்ளிடம் ஒன்றியம், ஆலங்காடு கீழதெருவைச் சோ்ந்த அன்புராஜ் என்பவரது வீடு சனிக்கிழமை நேரிட்ட தீ விபத்தில் எரிந்து சேதமடைந்தது. இதையொட்டி, கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபிரகாஷ் நேரில் சென்று அன்புராஜ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி ரூ. 2ஆயிரம் பணம் மற்றும் நிவாரண உதவிகளை வழங்கினாா்.

திமுக முன்னாள் எம்எல்ஏ பன்னீா்செல்வம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் பேச்சிமுத்து, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் அழகேந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செல்லச் சிரிப்பு... ரித்தி டோக்ரா!

விநாயகர் பற்றி குரோக் - எலான் மஸ்க் இடையே நடந்த உரையாடல் வைரல்!

சற்றே உயர்வுடன் முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, ஐடி பங்குகள் உயர்வு!!

10 கிலோமீட்டர் தொலைவு சாலைவலம்; தீப்தி சர்மாவுக்கு உற்சாக வரவேற்பு!

இந்த முறை, நான் வித்தியாசமாக ஒளிர்கிறேன்... கௌரி கிஷன்!

SCROLL FOR NEXT