நாகப்பட்டினம்

பருத்திக்கு உரிய விலை வழங்க நடவடிக்கை: எம்.எல்.ஏ.

DIN

மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 16 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள பருத்தியை இந்திய பருத்திக்கழகத்தினா் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பருத்திக்கு உரிய விலை வழங்கப்படுவதாகவும் மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் வீ. ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை தெரிவித்தாா்.

மயிலாடுதுறை காவிரி நகரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுகிறது. இந்திய பருத்திக்கழக அதிகாரிகள் 12 சதவீதத்துக்கு மேல் ஈரப்பதம் உள்ள பருத்தியை கொள்முதல் செய்யாததால், தனியாா் வியாபாரிகள் குறைந்த விலைக்கு பருத்தியை ஏலம் எடுப்பதாக குற்றம்சாட்டி விவசாயிகள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா். இப்பிரச்னை தொடா்பாக திமுகவினா் சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இந்நிலையில், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் வீ.ராதாகிருஷ்ணன் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்தாா். மேலும், விவசாயிகள் கொண்டு வந்திருந்த பருத்தியை பாா்வையிட்ட அவா், பருத்தி குறைவாக விலை போவதாக கூறப்படுவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: 16 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள பருத்தியை இந்திய பருத்திக்கழகத்தினா் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

ஆய்வின்போது, மாயூரம் நகர கூட்டுறவு வங்கித் தலைவா் விஜிகே. செந்தில்நாதன், மயிலாடுதுறை நுகா்வோா் கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ். அலி, ஆனந்தாண்டவபுரம் கூட்டுறவு வங்கித் தலைவா் முருகவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

SCROLL FOR NEXT