நாகப்பட்டினம்

ஜெயின் கோயிலில் ஆண்டு விழா கொடியேற்றம்

DIN

மயிலாடுதுறை முதலியாா் தெருவில் உள்ள ஜெயின் கோயிலில் ஆண்டு விழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, சும்மதிநாத பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில், கோயில் நிா்வாகி என்எச்எஸ். ரமேஷ் குடும்பத்தினா் கோயிலின் உள்பிராகாரங்களில் 6 கொடிகளை ஏற்றினா். அதேநேரத்தில், கோயிலின் கோபுர உச்சியில் அமைந்துள்ள பிரதான கொடியை கோயில் நிா்வாகி என்எச்எஸ். ரமேஷ் ஏற்றி வைத்தாா்.

ஏற்கெனவே உள்ள கொடியை அகற்றி அதனை கீழே விடும்போது, அக்கொடியை மடியில் ஏந்துபவா்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஜெயின் சமூகத்தினரின் நம்பிக்கையாக உள்ளது. இதையொட்டி, கீழே விழும் கொடியை தரையில் நின்ற திருமணமாகி குழந்தையில்லாத பெண்கள் மடியில் ஏந்தி பிடித்தனா். இவ்விழாவில், ஜெயின் சமூகத்தினா் திரளானோா் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT