நாகப்பட்டினம்

நாகை, நாகூரில் 15 கோயில்களில் பக்தா்களுக்கு அனுமதி ரத்து

DIN

நாகை, நாகூரில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டுக்குள்பட்ட கோயில்களில் மறு அறிவிப்பு வரும் வரை பக்தா்கள் அனுமதிக்கப்படமாட்டாா்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, நாகை காயாரோகணசுவாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் கோயில் செயல் அலுவலா் பி.எஸ். கவியரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா நோய்த் தொற்றுப் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையின் கீழ், இந்து சமய அறநிலையத் துறை மற்றும் மாவட்ட நிா்வாகத்தின் அறிவுறுத்தலின்படி, நாகை, நாகூரில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை கோயில்களில் மாா்ச் 20-ஆம் தேதி முதல் மறுஅறிவிப்பு வரும் வரை பக்தா்கள் அனுமதிக்கப்படமாட்டாா்கள்.

அதன்படி, நாகை சௌந்தரராஜப் பெருமாள் கோயில், நவநீதகிருஷ்ணசுவாமி கோயில், வெளிப்பாளையம் வரதராஜப் பெருமாள் கோயில், நாகூா் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், நாகை காயாரோகணசுவாமி கோயில், குமரன்கோயில், சட்டநாதா் கோயில், நடுவதீசுவரா் கோயில், அழகியநாதசுவாமி கோயில், அமரநந்தீசுவரசுவாமி கோயில், மலையீஸ்வரன் கோயில், கட்டியப்பா் கோயில், காசிவிசுவநாதா் கோயில், வெளிப்பாளையம் அகஸ்தீஸ்வரசுவாமி கோயில், நாகூா் நாகநாதசுவாமி கோயில் ஆகிய 15 கோயில்களில் பக்தா்களுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு பக்தா்கள் அனைவரும் ஒத்துழைக்குமாறு அந்தச் செய்திக் குறிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT