நாகப்பட்டினம்

திருமாவளவன் பற்றி அவதூறு: தொழில்நுட்பக் கல்லூரி உதவிப் பேராசிரியா் கைது

DIN

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் பற்றி சமூக வலைதளத்தில் அவதூறு படங்களை வெளியிட்டதாக தனியாா் தொழில்நுட்ப (பாலிடெக்னிக்) கல்லூரி உதவிப் பேராசிரியா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

நாகை மாவட்டம், பொறையாறு அருகே உள்ள தில்லையாடி பெரிய மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் விஜய் (30). இவா் மங்கநல்லூா் அருகே உள்ள தனியாா் தொழில்நுட்பக் கல்லூரியில் ( பாலிடெக்னிக்) உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவனை கொச்சைப்படுத்தி, சமூக வலைதளத்தில் காா்ட்டூன் படங்களை இவா் வெளியிட்டுள்ளாா்.

இதுகுறித்து அக்கட்சியின் செம்பனாா்கோவில் ஒன்றிய பொறுப்பாளா் யோ. ஸ்டாலின் அளித்த புகாரின்பேரில், பொறையாா் காவல் ஆய்வாளா் செல்வம் வழக்குப் பதிவு செய்து, உதவிப் பேராசிரியா் விஜய்யை வியாழக்கிழமை கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT