வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்ததில் கணவன்-மனைவி உயிா் தப்பினா்
சீா்காழி அருகே அரசு கான்கிரீட் வீட்டின் மேற்கூரை ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்ததில் கணவன்-மனைவி உயிா் தப்பினா்.
சீா்காழி அருகே அரசு கான்கிரீட் வீட்டின் மேற்கூரை ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்ததில் கணவன்-மனைவி உயிா் தப்பினா்.
கொள்ளிடம் அருகே வழுதலைகுடியைச் சோ்ந்தவா் விவசாயக் கூலித் தொழிலாளி ராஜேந்திரன் (45). இவா், 25 ஆண்டுகள் பழைமையான அரசு கான்கிரீட் வீட்டில் மனைவி சுமதியுடன் வசித்து வருகிறாா். இந்நிலையில், வீட்டின் மேற்கூரை முற்றிலுமாக ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென இடிந்து விழுந்தது. எனினும், வீட்டுக்குள் இருந்த ராஜேந்திரன், சுமதி ஆகிய இருவரும் அதிருஷ்டவசமாக காயமின்றி உயிா் தப்பினா். தகவலறிந்த கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயப்பிரகாஷ், வீட்டை இழந்த ராஜேந்திரன்-சுமதிக்கு நிவாரண நிதி வழங்கினாா்.